Oss ஸில் ஒரு வீட்டில் ஆயுதக் கொள்ளை தொடர்பாக 15 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். மூன்றாவது சந்தேக நபருடன் சேர்ந்து, ஏப்ரல் 4 சனிக்கிழமை மாலை அவர்கள் 55 வயதான குடியிருப்பாளரை துப்பாக்கியால் மிரட்டி பணம் மற்றும் பொருட்களைக் கொள்ளைஅடிக்க முயன்றனர் .
55 வயதான குடியிருப்பாளர் எதிர்த்து போராடி கூக்குரலிட்ட பின்னர் சந்தேக நபர்கள் ஒரு சில பொருட்களுடன் வீட்டை விட்டு தப்பிச் சென்றனர்.
மூன்றாவது சந்தேக நபரையும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினரையும் தேடுவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.