Herkenbosch இல் உள்ள தேசிய பூங்காவில் (Nationaal Park)ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 100 பேர் வெளியேற மறுத்துவிட்டனர். இதனால் அவர்கள் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படலாம் என்று நகரபிதாவின் நண்பர் நகராட்சிக்கு தகவல் அனுப்பியுள்ளார் .
தீவிபத்தின் போது, Herkenboschஷில் வசிக்கும் 4,200 பேர் புகை மற்றும் கரியமில வாயு வெளியேற்றம் அதிகமாக இருந்ததால் வேறு இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
Meinweg இல் ஏற்பட்ட தீ விபத்தின் போது Herkenbosch இல் குடியிருப்போறை வெளியேற்றுவதற்கு, யாரும் Herkenbosch சில் தங்கக்கூடாது என்று நகராட்சி அவசர கட்டளை ஒன்றை உருவாக்கியது. மக்கள் இணங்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படலாம். அவசரகால கட்டளை பொது இடங்களுக்கு பொருந்தும், ஆனால் மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற அதிகாரம் இருப்பதாக அது குறிப்பிடவில்லை.
45 குடும்பங்களை சேர்ந்த மக்கள் வெளியேற மறுத்த காரணத்தால் குடும்பங்கள் வீட்டிலேயே தங்கியிருப்பதால் ஏற்படும் அபாயங்கள் தங்களுக்குத் தெரியும் என்று ஒரு கடிதத்தில் கையெழுத்திட வேண்டியிருந்தது.