Hollandtamilan

Lockdown நீட்டிக்கப்பட்டுள்ளது, தொழில்முனைவோருக்கு கூடுதல் மானியம் வழங்க அமைச்சரவை முடிவு

கொரோனாவின் தாக்கம் கடுமையாக உள்ளத்தால் Lockdown மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்படும் .தொழில்முனைவோருக்கான மானியத்தை  செயல்படுத்த  அமைச்சரவை செயல்பட்டு வருகிறது.  Lockdown டிசம்பர் நடுப்பகுதியில் ஆரம்பித்து  ஜனவரி 19 வரை அறிவிக்கப்பட்டது, ஆனால் பிரதமர் Mark Rutte சமீபத்திய காலங்களில் கொரோனா அதி வேகமாக பரவி வருவது  நம்பிக்கையைத் தரவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கைகளின் நீட்டிப்பு செவ்வாய்க்கிழமை மாலை, Rutte மற்றும் சுகாதார  மந்திரி De Jonge ஆகியோரின் செய்தியாளர் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உதவி மானியத்தின் பெரும்பகுதி  கடினமான பாதிப்புகளை சந்தித்த, நீண்ட காலமாக தங்கள் வணிகத்தை மூடிவிட்ட . உணவக உரிமையாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் .  டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டுள்ளன.

 Jaap van Dissel, directeur van het Centrum Infectieziektebestrijding van het RIVM,அமைச்சர்கள் Wopke Hoekstra, Eric Wiebes மற்றும்  Wouter Koolmees ஆகியோர் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் எவ்வாறு  உதவ முடியும் என்பதை ஆராய்வார்கள்.  பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான Catshuis ஸில், அமைச்சர்கள் மற்றும் RIVM இயக்குனர் Jaap van Dissel போன்ற நிபுணர்கள் கொரோனா வைரஸின் பரவல்  குறித்து விவாதிக்க வெள்ளிக்கிழமை கூடினார்கள்