ரத்து செய்யப்பட்ட விமானத்திற்கான பிரயாணிகள் தங்கள் பணத்தை திரும்பப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று டச்சு விமான நிறுவனங்கள் கூறுகின்றன. நுகர்வோர் சங்கத்தின் ஆராய்ச்சியின்படி விமான நிறுவனங்கள் ஐரோப்பிய விதிகளை மீறி செயல்படுகின்றன.
ஐரோப்பிய விதிமுறைகளின் கீழ், விமான நிறுவனம் விமானத்தை ரத்துசெய்தால் பிரயாணிகள் செலுத்திய இருக்கை முன்பதிவுக்கான செலவுகள், சாமான்கள் மற்றும் முன்பதிவு செலவுகள் உள்ளிட்ட முழுத் தொகையையும் திரும்ப பெறமுடியும் .
பல ஐரோப்பிய விமான நிறுவனங்கள் இந்த விதிகளை பின்பற்றுகின்றன, ஆனால் டச்சு விமான நிறுவனங்கள் அவற்றை பெருமளவில் மீறுகின்றன. எடுத்துக்காட்டாக, TUI இல் பறக்கும் பிரயாணிகள் தங்கள் விமானம் ரத்துசெய்யப்பட்டால் ஒரு வவுச்சரைப் பெறுவார்கள். பிரயாணிகளின் செலவினங்களை திருப்பிச் செலுத்துவதற்கு உரிமை உண்டு என்று நிறுவனம் ஒருபோதும் குறிப்பிடவில்லை. Transavia மற்றும் KLM ஆகியவை ஒரு வவுச்சரை வழங்குகின்றன.
ரத்து செய்யப்பட்ட விமானம் ஜூன் 3 க்குப் பிறகு திட்டமிடப்பட்டிருந்தால் மட்டுமே Transavia பயணிகளுக்கு பணத்தைத் திருப்பித் தரும். இது விமான நிறுவனத்திற்கு நிறைய பணத்தை மிச்சப்படுத்துகிறது, ஏனெனில் ஜூன் 4 முதல் பல விமானங்களை இயக்கத் தொடங்கும். மே 14 க்குப் பிறகு KLM இல், சீனா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு பறக்க அல்லது அங்கிருந்து திரும்பும் பிரயாணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டால் கோரிக்கையின் அடிப்படையில் பிரயாணிகள் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள்.