பல் மருத்துவர்கள் மற்றும் பல் சுகாதார நிபுணர்கள் புதன்கிழமை முதல் வழக்கமான தமது சேவையை மீண்டும் தொடங்கலாம். கொரோனா தொற்று இல்லாத நோயாளிகள் புதன்கிழமை முதல் பல் மருத்துவர்கள் மற்றும் பல் சுகாதார நிபுணர்களை அணுகலாம் .
கடுமையான நிபந்தனைகளுடன் , முகமூடி மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணிவதன் மூலம் பணியாளர்கள் தங்களை சரியாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நோயாளிகள் முடிந்தவரை தனியாக வந்து காத்திருக்கும் இடத்தில் முடிந்தவரை குறுகிய நேரம் காத்திருக்க வேண்டும்.