Hollandtamilan

சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக பதிவிட்டால் தேசவிரோத வழக்கில் சிறை

காவல்நிலையத்தில்  தீவைக்க சமூக வலைத்தளத்தில் அழைப்பு விட்ட இளைஞன் கைது. Hoensbroek க்கைச் சேர்ந்த 21 வயது இளைஞன் வியாழக்கிழமை காலை தேசத் துரோக வழக்கில்  கைது செய்யப்பட்டான். பொலிஸ் நிலையத்திற்கு தீ வைக்க வருமாறு  அவர் சமூக ஊடகங்களில் அழைப்பு விடுத்தார்.

அந்த சமூக விரோதியை  படுக்கை அறையில் வைத்து காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர் . பொலிஸ் நிலையத்திற்கு தீ வைக்க வேண்டும் என்று அழைக்கும் சமூக ஊடக பதிவுகளை  அவர் பகிர்ந்ததால் வன்முறையை அவர் தூண்டிவிடுவதாக கைது செய்யப்பட்டார் . அந்த சமூக விரோதி  சிறையில் அடைக்கப்பட்டார் . வெள்ளிக்கிழமை நடமாடும்  நீதிமன்ற போலீஸ் நீதிபதி முன் ஆஜராக வேண்டும்.

அது உடனடியாக ஒரு தீர்ப்பை வழங்கும். காவல்துறையினர் ஏற்கெனவே கலவரத்தை தூண்டிய  சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை மாலை Weertஐ சேர்ந்த 31 வயதான  ஒருவரை கைது செய்தனர். அரசு மற்றும் ஊழியர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் பதிவுகளை அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு இருந்தார் . Weertடைச் சேர்ந்தவர் இன்னும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்