Hollandtamilan

பிரித்தானியாவுக்கு சட்டவிரோத பயணம்! – 83 பேர் கைது!!

நேற்று திங்கட்கிழமை பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக பயணம் மேற்கொண்ட 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஃப்கான், சிரியா, ஈராக் மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பா து கலே கடல் பிராந்தியத்தில் இருந்து சிறிய படகு ஒன்றின் மூலம் பிரித்தானியாபின் டோவர் பகுதி நோக்கி கடலில் பயணித்துள்ளனர்.

இவர்கள் சில நிமிட இடைவெளிகளில் ஐந்து படகுகளில் ஒன்றின் பின் ஒன்றாக பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரையும் கடற்படை ஜொந்தாமினர் கைது செய்துள்ளனர்.

இக்கோடை காலத்தில் 1,000 அகதிகள் இதுவரை கடலில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.