பொது போக்குவரத்தில் பயணிகள் ஜூன் 1 முதல் முகமூடி அணிய வேண்டும். அமைச்சரவை இதை புதன்கிழமை அறிவிக்கும், இதில் மருத்துவம் அல்லாத வாய் முகமூடிகளும் இருக்கலாம். தொடர்வண்டிகள் , அமிழ் தண்டூர்தி (TRAM), பேருந்துகள் மற்றும் நகரீ (Metro) ஆகியன அந்த தேதியிலிருந்து மீண்டும் இயக்கத் தொடங்கும்.
மார்ச் மாதத்திலிருந்து, பொது போக்குவரத்து சேவை என்பது முக்கியமான தொழில்களைக் கொண்ட நபர்களின் பயணங்களுக்கு மட்டுமே நோக்கமாக இருந்தது. பொது போக்குவரத்தில் 1.5 மீட்டர் தொலைவில் வைத்திருப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதால், அமைச்சரவை OMT யிடம் ஆலோசனை கேட்டது.
அந்த பரஸ்பர தூரத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டுமானால், கொரோனா நெருக்கடிக்கு முன்னர் இருந்த எண்ணிக்கையிலிருந்து பயணிகளில் கால் பகுதியினரை பொதுப் போக்குவரத்து கொண்டு செல்ல முடியும் என்று உள்கட்டமைப்பு அமைச்சகம் முன்பு அறிவித்திருந்தது. பயணிகளின் வருகையை முடிந்தவரை சீராக நகர்த்துவதற்காக இப்போது ஆறு தொடர்வண்டி நிலையங்களில் அடையாளங்கள் வைக்கப்பட்டுள்ளன.